Tuesday, April 20, 2010

கல்குருவி - Guy de Maupassant

This short story was written by famous French writer Guy de Maupassant and has been translated in Tamil by famous Tamil writer Charu Nivedita.

ஒரு பறவைக் கூட்டம்.  அதில் ஒரே ஒரு பறவை மட்டும் கூட்டத்தை விட்டுப் பிரிந்து செல்லும் போது கீழே பாறையின் மீது ஒரே ஒரு பறவை மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்து அதன் அருகே செல்லலாம் என்று முடிவு செய்திருக்கிறது.  முதல் முதலாகப் பார்க்கப் போகிறோம்; ஒரு பூவையும் எடுத்துச் செல்வோம் என்று எங்கெங்கோ தேடி அலைந்து ஒரு அற்புதமான மலரை எடுத்துக் கொண்டு அந்தப் பறவையிடம் சென்றது.  மலரை எடுத்துக் கொடுத்தது.  ஆனால் அந்த ஒற்றைப் பறவை நகரவே இல்லை.  காத்திருந்து காத்திருந்து பார்த்து விட்டு தன் கூட்டம் திரும்பி வருவதைப் பார்த்து உயரே எழுந்து சேர்ந்து கொண்டது.

ஆனாலும் இப்போதும் அடிக்கடி அந்த அசையாத ஒற்றைப் பறவைக்கு ஒரு மலர்க் கொத்தைக் கொண்டு வந்து கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.  பாவம், அந்தப் பறவைக்கு அந்த அசையாத பறவை ஒரு கல்பறவை என்று தெரியவில்லை.

Thursday, April 8, 2010

விடுக(வி)தை???

மரமது மரத்தில் ஏறி
மரமதைத் தோளிற் சாய்த்து
மரமது மரத்தைக் கண்டு
மரத்தினால் மரத்தைக் குத்தி
மரமது வழியே சென்று
வளமனைக் கேகும் போது
மரமது கண்ட மாந்தர்
மரமொடு மரம் எடுத்தார் . . .

Tuesday, March 30, 2010

At last I found a way to talk to you…..

 

 

talktou1

 

 

 

talktou2

Saturday, March 27, 2010

Guess what film is this…..

image

If a computer can understand this why can't we??

01001001 00100000 01101000 01101111 01110000 01100101 00100000 01111001 01101111 01110101 00100000 01110101 01101110 01100100 01100101 01110010 01110011 01110100 01100001 01101110 01100100 00100000 01100001 01110100 01101100 01100101 01100001 01110011 01110100 00100000 01110100 01101000 01101001 01110011 00100000 01101100 01100001 01101110 01100111 01110101 01100001 01100111 01100101 00101110 00001101 00001010 00001101 00001010 01001001 01101110 00100000 01100001 01101110 01111001 00100000 01101100 01100001 01101110 01100111 01110101 01100001 01100111 01100101 00100000 01101100 01101001 01101011 01101001 01101110 01100111 00100000 01110011 01101111 01101101 01100101 01101111 01101110 01100101 00100000 01101101 01100101 01100001 01101110 01110011 00100000 01110100 01101000 01100101 00100000 01110011 01100001 01101101 01100101 00100000 01100110 01110010 01100101 01100001 01101011 01101001 01101110 01100111 00100000 01110100 01101000 01101001 01101110 01100111

Thursday, March 11, 2010

ஒரு காதலை தெரிவிக்கும்போது - மனுஷ்யபுத்திரன்

ஒரு சிறு பெண்


தயங்கித் தயங்கி

தன் காதலை தெரிவிக்கிறாள்



அது அவள் முதல் காதலாக இருக்கவேண்டும்

அல்லது ஒவ்வொரு காதலையும்

தெரிவிக்கும்போதும்

அவள் அவ்வளவு

குழப்பமடைபவளாக இருக்க வேண்டும்



உண்மையிலேயே அது

புத்தம் புதியதாக இருந்தது

அப்போதுதான் உறையிலிருந்து

பிரிக்கபட்ட ஆடையின் வாசனையை

அது நினைவூட்டுகிறது


அவளுக்கு ஒரு காதலை

எப்படித் தெரிவிக்கவேண்டும்

என்பதுகூட தெரிந்திருக்கவில்லை

அப்போது அவள் வீட்டைப் பற்றி பேசினாள்

அம்மாவைப்பற்றி பேசினாள்

பக்கத்துவீட்டு குழந்தைகளைப் பற்றி பேசினாள்

ஒரு அபத்தமான கனவைப் பற்றி பேசினாள்



அவள் விரும்பியதற்கு

நேர் எதிரானதையே

அவள் பேசினாள்



அது தவறாகவே புரிந்துகொள்ளப்படும்என்று

அவள் அஞ்சினாள்

ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப்பட்டபோது

மிகவும் வியப்படைகிறாள்



தற்செயலாக திறந்துவிட்ட

ஒரு அறையின் எதிர்பாராத காட்சியில்

அவள் அப்படியே நின்றுகொண்டிருக்கிறாள்




அதைச் சொல்லும்போது அவளுக்கு

அவள் ஒத்திகை பார்த்த எதுவுமே

நினைவுக்கு வரவில்லை



அதை ஒரு உணர்ச்சிகரமானநாடகமாக

கையாளவே அவள் விரும்பினாள்

ஆனால் ஒரு நகைச்சுவைக் காட்சியைப்போல

அதைக் கையாண்டாள்



ஒரு காதலைத் தெரிவிப்பது

இன்னொரு மனிதனை முழுமையாக

சந்திப்பது என்பது அவளுக்குத் தெரியாது

அவள் அதை முதலில்

ஒரு சுவாரசியமான விளையாட்டாகவே தொடங்கினாள்

ஆனால் அந்தச் சந்திப்புநீணடதாக இருந்தது



ஒருவரை முழுமையா சந்திப்பது

அவ்வளவு பாரமானது என்று

அவள் யோசித்ததே இல்லை



அவள் திரும்பிப்போக விரும்பினாள்

அவளுக்கு அவளாக மட்டும் கொஞ்சம்

மூச்சுவிட வேண்டும்போல இருந்தது

ஆனால் அந்த சந்திப்புமுடிவடைவதாகவே இல்லை



அவள்

எல்லாவற்றையும்முழுமையாக

நம்பவிரும்பினாள்

எல்லாவற்றையும் முழுமையாக

சந்தேகிக்க விரும்பினாள்

தனக்கு யோசிக்க

வேறு விஷயஙகளே இல்லையாஎன்று

அவளுக்கு எரிச்சலாக இருந்தது

ஆனால் அவள் அதையே யோசித்தாள்


ஒரு சிறுபெண்

தனது காதலை தெரிவிக்கும்போது

அவ்வளவு நிராயுதபாணியாய் இருக்கிறாள்



இந்த உலகத்தின் மீது வைக்கும்

கடைசி நம்பிகையைப்போல

கருணையின்மைகளுக்கு முன்னே

ஒரு கடைசி பிரார்த்தனையைப் போல



அவ்வளவு பிரகாசமாக இருக்கிறது

அது!!!


ம்...சத்தியமான வார்த்தைகள்!!!!